search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராணுவ வீரர்"

    • லாரி மீது பைக் மோதல்; முன்னாள் ராணுவ வீரர் இறந்தார்.
    • சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் சாஸ்தா நகரை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது45), இவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு தற்போது சிவகங்கை யில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.

    ஜெயசங்கர் வேலை முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்றார். அவர் மானா மதுரை அருகே கொன்னக் குளம் விலக்கு பகுதியில் சென்றபோது சாலை யோரத்தில் நின்று கொண்டி ருந்த லாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசங்கர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந் தார்.

    இந்த விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    • சுப்புராமு ராணுவவீரராக பணியாற்றி வருகிறார்.
    • இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு செல்போனில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள உமையதலைவன்பட்டியை சேர்ந்தவர் வைரமுத்து. இவரது மகன் சுப்புராமு (வயது25). இவர் ராணுவவீரராக பணியாற்றி வருகிறார்.

    தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆன இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு செல்போனில் அந்தரங்க பகுதி குறித்து ஆபாச தகவல் அனுப்பி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் அது குறித்து தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்புராமு, அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் திரு வேங்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணுவவீரர் சுப்புராமை தேடி வருகின்றனர்.

    • விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி, பிள்ளைகளை அடித்து உதைத்து சித்திரவதை
    • தினேஷின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளார்.

    கன்னியாகுமரி :

    புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி வட்டவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் றசலையன் மகள் கவிதா (வயது 35). இவருக்கும் நித்திரவிளை அருகே சாத்தன் கோடு பகுதியை சேர்ந்த ஜெகன் (40) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடை பெற்றுள்ளது. தற்போது இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

    ஜெகன் ராணுவத்தில் சேர்ந்து தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக வீட்டிற்கு வரும் போதெல்லாம் மனைவி, பிள்ளைகளை அடித்து உதைத்து சித்திரவதை செய்வாராம். இதனால் நேற்று முன்தினம் கவிதா புதுக்கடையில் உள்ள தனது சகோதரன் தினேஷ் என்பவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது அங்கு வந்த ஜெகன் வீட்டில் அத்து மீறி நுழைந்து கவி தாவை தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தினேஷின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளார்.

    இது தொடர்பாக தினேஷ் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, ராணுவ வீரர் ஜெகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கார் திடீரென நிலை தடுமாறி வலது பக்க மின்கம்பம் மீது வேகமாக மோதி நின்றது
    • விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது

    கன்னியாகுமரி :

    மண்டைக்காடு பகுதியை சேர்ந்த வர் விஜின் (வயது37) இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தையுடன் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு தோட்டி கோடு வழியாக திங்கள் நகர் நோக்கி வரும்போது தபால் அலுவலகம் அருகே கார் திடீரென நிலை தடுமாறி வலது பக்க மின்கம்பம் மீது வேகமாக மோதி நின்றது. இதில் விஜின் மற்றும் குடும்பத்தார் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக இப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது இது குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வருபவர் பிஸ்மி அல்மேரிஸ்.

    நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் நேராக மோதுவது போல வந்துள்ளார்.

    இதனை பிஸ்மி அல்மேரிஸ் அவரை தடுத்து நிறுத்தி கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பெண் போலீசை தகாத வார்த்தைகளால் பேசி கன்னத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த பிஸ்மி அல்மேரிஸ் தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அரூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் பெண் போலீசை தாக்கியவர் அரூர் அருகேயுள்ள பொய்யப்பட்டியை சேர்ந்த கருணாநிதி (எ) காளிதாஸ் (வயது 29) என்பதும், ராணுவ வீரரான அவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளதும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெண் போலீசை ராணுவ வீரர் தாக்கிய சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    • புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

    கன்னியாகுமரி:

    புதுக்கடை அருகே கீழ்குளம் பகுதி பரவை என்ற இடத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் கிறிஸ்டோபர் (வயது65). ஓய்வு பெற்ற பேராசிரியர். தற்போது அங்குள்ள ஒரு கிறிஸ்தவ சபை தலைவராக உள்ளார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகன்குமார். இவர் டெல்லியில் ராணுவ வீரராக உள்ளார். தற்போது விடுமுறைக்காக ஊருக்கு வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் உள்ளது. இது சம்மந்தமாக புதுக்கடை போலீசில் இருவர் மீதும் பல வழக்குகள் பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் சம்ப வத்தன்று அங்குள்ள திரு மண மண்டபம் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருவரும் சென்று ள்ளனர். அப்போது ஜெகன் குமார் தகாத வார்த்தை கள் பேசி ஜஸ்டின் கிறிஸ்டோ பரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுள்ளார்.

    இதில் காயம் அடைந்த ஜஸ்டின் கருங்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்று ஜெகன்குமார் அளித்துள்ள புகாரில் ஜஸ்டின் தன்னை தகாத வார்த்தைகள் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடு த்துள்ளதாக தெரிவித்து ள்ளார். மேலும் அவர் தேங்கா ப்பட்டணம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராணுவ வீரர் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் மாவட்டத்திலேயே ‘‘குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக’’ மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் 74-ஆவது குடியரசு தின விழா நடந்தது. செயல் அலுவலர் வே.கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் அ.புசலான் தேசியக்கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதுடன், நகரின் தூய்மை குறித்து பேசினார்.

    பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத பேரூராட்சியாக மாற அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். முன்னாள் ராணுவ வீரர் சூரியகுமாருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டலர் துரைராஜ், கவுன்சிலர்கள் கண்ணன், தனபாக்கியம், சேக்கப்பன், அழகு, அமுதா, நிகார்பானு, சித்ரா, தூய்மை பணி மேற்பார்வையாளர் சிற்றரசு மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் மாவட்டத்திலேயே ''குப்பை இல்லா தூய்மை பேரூராட்சியாக'' மாற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    • திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண்
    • ஆசைக்கு இணங்காததால் தொடர்பை துண்டித்ததாக போலீசில் புகார்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பந்திவெட்டான் பாறவிளை பகுதியைச் சேர்ந்த 24 வயது எம்.சி.ஏ. பட்டதாரி பெண்ணுக்கும் தக்கலை தாரோடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சுபின் (27) என்பவருக்கும் சமூக வலை தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காதலன் சுபின் சரியாக பேச வில்லையாம். பட்டதாரி பெண் போன் செய்தாலும் எடுக்காமல் துண்டித்துள்ளார். இதனால் சுபின் பற்றி விசாரித்த போது அவருக்கு வேறு ஓரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமானதும், 23-ந் தேதி (இன்று) திரும ணம் நடக்க உள்ளதும் தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பட்டதாரி பெண், நேற்று மாலை தக்கலை போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை சுபின் திருமணம் செய்ய உள்ளதாக அவர் தெரி வித்தார். இது தொடர்பாக தக்கலை இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் சுபின் வீட்டுக்குச் சென்று விசா ரணை நடத்தினர். அப்போது காதல் விவகாரம் உண்மை தான் என தெரிய வந்தது. இதனால் சுபின் திருமணம் தடை பட்டது.

    இது தொடர்பாக பட்டதாரி பெண் போலீசில் கொடுத்த புகாரில், கடந்த 3½ ஆண்டுகளாக நானும் சுபினும் காதலித்து வந்தோம். விடுமுறை கிடைக்கும் போது நேரில் சந்தித்து பேசுவோம். சில மாதங்களுக்கு முன்பு அவர் உல்லாசமாக இருக்க விரும்பினார்.

    ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. அதன் பிறகு சுபின் நடவடிக்கை யில் மாற்றம் ஏற்பட்டது. என்னுடன் பேசுவதை தவிர்த்தார். நான் போன் செய்தாலும், இணைப்பை துண்டித்தார். மேலும் சில நாட்களாக அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது.

    நண்பர்கள் மூலம் விசாரித்த போது, சுபினுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் வேறு வழியின்றி புகார் கொடுக்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

    புகார் கூறப்பட்டுள்ள சுபின், தற்போது சென்னையில் பணியில் உள்ளார். திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். திருமணம் தடை ஆனதை தொடர்ந்து, அவரது குடும்பத்தினரிடமும் பட்டதாரி பெண்ணிடமும் போலீசார் பேசி வருகின்றனர்.

    • கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
    • காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை தேவி நகரை சேர்ந்தவர் மைக்கேல்சாமி (48). ராணுவ வீரர்.

    இவர் புனேயில் உள்ள ராணுவ மையத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள கூர்க்கா படை பிரிவுக்கு பணியிட மாறுதல் செய்யப்படடார்.

    இதையடுத்து 20 நாள் விடுமுறையில் காரமடையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டு கடந்த 4-ந் தேதி சிக்கிம் புறப்பட்டு சென்றார்.

    அங்கு பங்கர் பகுதியிலுள்ள இந்தியா-சீனா ராணுவ எல்லை பகுதியில் 17,000 மலை உச்சியில் பனிப்பொழிவு நிறைந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அங்கு நிலவிய கடும் குளிரான காலநிலையால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.

    இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை விமான நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் சமீரன் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவரது உடல் காரமடையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு கோவை ராணுவ பிரதேசப்படை மூலம் இவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது மனைவியிடம் தேசியக்கொடி ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடர்ந்து அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கோவை-ஊட்டி சாலையில் உள்ள ஆர்.சி.கல்லறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    இதில் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், கூர்க்கா ரெஜிமென்ட் முன்னாள் கமென்டிங் அதிகாரி கர்ணல் லலித்ஜெயின், கோவை வடக்கு கோட்டாட்சியர் ரூபா, தாசில்தார் மாலதி மற்றும் அரசு அதிகாரிகள், உறவினர்கள் மலர் வளையம் வைத்து ராணுவ வீரருக்கு மரியாதை செலுத்தினர்.

    கோவை ராணுவ பிரதேச படை லெப்டனென்ட் ஜென்ரல் சாந்தனு தலைமையில் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு அனிதா ஜோசி(58) என்ற மனைவியும், மோனிகா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மகேஷ் (27), ராணுவ வீரர். இவர் விடுமுறையில் வரும் போது தன்னுடைய காரை, அமல நிஷா வீட்டு கேட்டின் முன்பு சாலையில் நிறுத்துவாராம்.
    • மகேசுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த அஜில் (30) என்பவரும் பேசியதோடு, கல்வீசி அமலா நிஷாவின் அண்ணனை தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி :மார்த்தாண்டம் அருகே பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் மீது வழக்கு

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் அமல நிஷா (வயது 40).

    இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் மகேஷ் (27), ராணுவ வீரர். இவர் விடுமுறையில் வரும் போது தன்னுடைய காரை, அமல நிஷா வீட்டு கேட்டின் முன்பு சாலையில் நிறுத்துவாராம்.

    இதனால் அமலநிஷா வீட்டில் உள்ளவர்கள் வெளியே செல்ல முடியாத நிலை உருவானது. சம்பவத் தன்று இதனை அமலா நிஷா தட்டிக் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் மகேஷ் ஆத்திரமடைந்து அமலா நிஷாவின் தலை முடியை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மகேசுக்கு ஆதரவாக அப்பகுதியைச் சேர்ந்த அஜில் (30) என்பவரும் பேசியதோடு, கல்வீசி அமலா நிஷாவின் அண்ணனை தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பேரில் மார்த்தா ண்டம் போலீசார் விசா ரணை நடத்தி மகேஷ் மற்றும் அஜில் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு

    கன்னியாகுமரி:

    வெள்ளிச்சந்தை அருகே மணவிளையை சேர்ந்தவர் ஜெகன் ஜோஸ் (வயது 42). இவர் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவி அமராவதி. போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.

    ஜெகன் ஜோஸ் கோழி பண்ணை நடத்தி வந்தார். கோழிப்பண்ணை நடத்தியதில் அவருக்கு கடன் ஏற்பட்டு அவர் யாரிடமும் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று அமராவதி தனது பணிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சமையலறையில் ஜெகன் ஜோஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பணி முடிந்து இரவு வந்த அமராவதி ஜெகன் ஜோஸ் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அமராவதி வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ஜெகன் ஜோசிற்கு 2 மகன்கள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்தஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
    • இவருக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் முத்துமகேசுவரன்(35). இவர் 2005-ம் ஆண்டு ராணுவத்தில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள 10-வது என்ஜினீயர் ரெஜிமெண்டில் ஹாவில்தா ராக பணியாற்றினார்.

    ராணுவவீரர் முத்து மகேசுவரனுக்கு கடந்த டிசம்பர் மாதத்தில் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. செகந்திராபாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று மாலை அவர் உடல் ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு முத்துமகேசுவரன் உடலுக்கு ராணுவ அதி காரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் இருந்த பெட்டியில் போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ராணுவவீரரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    மரணமடைந்த ராணுவவீரர் முத்துமகே சுவரனுக்கு மோகனப்பி ரியா(வயது34) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    ×